ஆரையம்பதி மாற்றுத்திறனாளிகள் சமூக உள்வாங்கல் அமைப்பின் சுயதொழில் உதவி வழங்கும் நிகழ்வு YMCA நிறுவன உதவியுடன் 2024.01.23 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று தாழங்குடா சமூக பராமரிப்பு நிலையத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிரதேச செயலாளர் அவர்களால் சுயதொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













