
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் மாவிலங்கத்துறை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயமும் மாவிலங்கத்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையும் இணைந்து நடத்திய தெய்வீக கிராம நிகழ்வானது 17.12.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.30 மணிக்கு மாவிலங்கத்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச அறநெறி பாடசாலை மாணவர்களின் ஊர்வலம், கோமாதா பூசை, மரநடுகை நிகழ்வு, சைவப்புலவர் J.கஜேந்திரா அவர்களின் சிறப்பு சொற்பொழிவு, பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் எனப்பல நிகழ்வுகள் இந்நிகழ்வை அலங்கரித்தன.
தொடர்ந்து அறநெறி பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஆக்கத்திறன் போட்டியில் பிரதேச ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் இறுதியில் நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வை கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் ஒழுங்குபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.



















