சனசமூக மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர் நியமனத்திற்கான மத்தியஸ்த பொறிமுறை மற்றும் மத்தியஸ்த உபாய மார்க்க 05 நாட்கள் பயிற்சிப் பட்டறையானது 20.11.2023 தொடக்கம் 24.11.2023 வரை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு 2023.11.20 ஆம் திகதி திங்கட்கிழமையன்று இதன் ஆரம்ப நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்ட பயிற்றுவிப்பாளர் MIM.ஆசாத் மற்றும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பயிற்றுவிப்பாளர் S.விமலராஜா ஆகியோர் வளவாளர்களாகவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது மத்தியஸ்த அமர்வு செயன்முறை, அதன் படிமுறைககள் என்பன கற்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















