
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இலங்கையின் 15 ஆவது குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு தொடர்பான பயிற்சி வகுப்பானது 2023.09.14 ஆம் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலக நிரற்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புள்ளி விபரவியலாளரும் பிரதி தொகை மதிப்பு அத்தியட்சகருமான T.ஜெய்த்தனன் மற்றும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மேற்பார்வை உத்தியோகத்தர்கள், வட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், நிரற்படுத்தும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இப்பயிற்சி நிகழ்வானது 2023.09.14 ஆம் திகதி தொடக்கம் 2023.09.16 ஆம் திகதி வரை 03 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
















