மண்முனைப்பற்று பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 2023.07.11 ஆம் திகதி செவ்வாய்கிழமை பி.ப 2.30 மணிக்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ சி.சந்திரகாந்தன் அவர்களது தலைமையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.













