
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் பகுதியில் தீயினால் வீடு முற்றாக எரிந்து சாம்பலாகிய குடும்பத்திற்கான புதிய வீட்டினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2023.03.24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சுபவேளையில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இரவு வேளையில் குறித்த பகுதியில் வசித்து வந்த குடும்பத்தின் வீடு திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் வசிப்பதற்கு இடம் இல்லாது பரிதவித்து வந்த குடும்பத்திற்காக நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















