மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்முனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் உணவுப் பாதுகாப்புத் திட்டம் - 2022 எனும் தலைப்பில் கௌபி, நிலக்கடலை, பயற்றை போன்ற பயிர்களின் பயிர்ச்செய்கை திட்டமானது 2022.08.03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன் அறுவடை நிகழ்வானது 2022.09.29 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இத்திட்டத்திற்கான நிதி உதவி Brandix நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.