
மேற்படி வேலைத்திட்டத்திற்கமைவாக மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 300 சமுர்த்தி பயனாளிகளுக்கு அதன் முதற்கட்டமாக உபகரணம் வழங்கும் நிகழ்வானது 25.10.2021 அன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெற்றது. மேற்படி வேலைத்திட்டத்திற்கமைவாக மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 300 சமுர்த்தி பயனாளிகளுக்கு அதன் முதற்கட்டமாக உபகரணம் வழங்கும் நிகழ்வானது 25.10.2021 அன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டதுடன் பயனாளிகளுக்கு வாழ்வாதார பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அதனடிப்படையில் விவசாயத்திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்களும், சந்தைப்படுத்தல் திட்டத்தின் கீழ் 03 பயனாளிகளுக்கு சிகையலங்கார தொழிலுக்கான உபகரணங்களும் 09 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்ட அதேவேளை சிறுகைத் தொழில் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















