இலங்கை ஐனநாயக சோசலீச குடியரசின் 72ஆவது தேசிய தினத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேசத்திற்கான பிரதான சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் அவர்களது தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது உதவிப் பிரதேச செயலாளர், உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மரநடுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.















