"வளர்ந்து வரும் நாட்டிற்கு ஒரு வளரும் மரம்" தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் முதலாம் திகதி முதல் மரம் நடும் வாரமாக நாடு பூராகவும் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதன் ஓரங்கமாக மண்முனைப்பற்று பாலமுனை நடுவோடை பகுதியில் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
நடுவோடை மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் இடம்பெற்ற
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி அவர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மீன்பிடி சங்க நிருவாகிகள் மற்றும் சிறுவர்களென அதிகளவிலானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














