"கற்றல் உபகரணம் இன்மையால் பாடசாலை செல்லாமல் ஒரு பிள்ளையேனும் இருத்தல் கூடாது" எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பாடசாலை செல்லும் கற்றல் தேவைப்பாடுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 70 மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டிற்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர் (கிராம சேவகர்), சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்கள்.
பிரதேச வர்த்தகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட உள்ளுர் அமைப்புக்கள் ஆகியவற்றின் அனுசரனையில் இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















